நிகழ்வு-செய்தி

கடற்படை வீரர்களுக்கு 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு வெலிசர கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜப்கஷவின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகளின் கடற்படைக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் சுகாதார அமைச்சகத்தில் இருந்து இன்று (2021 ஜனவரி 29) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின் கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக முன்னிலையிலிருந்து செயலாற்றும் சில கடற்படை வீரர்களுக்கு முதற் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

29 Jan 2021

மறைந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் நினைவு சிலை தம்புல்லையில் திறக்கப்பட்டது

தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான போர்வீரரான ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவை நினைவுகூருவதுக்காக தம்புல்லை, தபுலுகம மப/கலே/வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தில் கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நினைவு சிலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இன்று (2021 ஜனவரி 29) திறந்து வைக்கப்பட்டன.

29 Jan 2021